அதிமுக எம்எல்ஏ வீடு மீது தாக்குதல்-நடவடிக்கை எடுப்போம்: கருணாநிதி
சென்னை:அதிமுக எம்எல்ஏ கலைராஜனின் வீட்டை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
இது குறித்து சட்டசபையில் அதிமுக பிரச்சனை கிளப்பியது. அக் கட்சியின் எம்எல்ஏ வைத்தியலிங்கம் பேசுகையில்,
ஒரத்தநாட்டில் உள்ள சென்ைன தி.நகர் எம்எல்ஏ கலைராஜனின் வீடு கடந்த 5ம் தேதி தாக்கப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய சமூக விரோதிகளுக்கு போலீசாரும் உடந்தையாக இருப்பார்களோ என்ற சந்தேகம் வருகிறது என்றார். இதற்கு திமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அடுத்துப் பேசிய மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன், டிரான்ஸ்பார்மரை செயலிழக்கச் செய்துவிட்டு, இருட்டுச் சூழலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அச்சமின்றி நடமாடும் நிலை ஏற்பட வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
நள்ளிரவு 1 மணியளவில் அடையாளம் தெரியாத சிலர் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பியோடி இருக்கிறார்கள். இது குறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ெசய்திருப்பதால் அங்கு இப்போது அமைதி நிலவுகிறது.
இது போன்ற நிகழ்ச்சிகள் முன்பு எதிர்க் கட்சியாக இருந்த எங்கள் கட்சியினர் மீதும் நடந்திருக்கின்றன.
அவைகளுக்கெல்லாம் எந்த அளவுக்கு இங்கே நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அவைகளையெல்லாம் முன்மாதிரியாகக் கொண்டு இப்போது நடவடிக்கை எடுக்கப்படாமல், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியை இந்த அவைக்குத் தருகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications