வியாபாரி குடும்பம் கொலை- 3 பேருக்கு தூக்கு
சேலம்:வியாபாரியின் குடும்பத்தை கூண்டோடு கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகளுக்கு சேலம் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2005ம் ஆண்டு, சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரி மோகன் ராவ்(48), மனைவி ஷீலா(40), மகன் பிரபு(13) ஆகியோர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
மேலும் வீட்டிலிருந்த பணம், 162 சவரன் தங்க நகைகள், 32 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். சேலம் முதல் அக்ரஹாரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சங்கர நாராயணன், ரகுமான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணராஜா 3 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications