வேன் மீது ரயில் மோதி பயங்கரம்: 13 வி.ஏ.ஓ.க்கள் பரிதாப பலி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற வேன் மீது ரயில் பயங்கரமாக மோதியதில் 13 கிராம நிர்வாக அலுவலர்கள் பரிதாபமாக இறந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை செங்கல்பட்டிலிருந்து அரக்கோணத்திற்கு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் வந்தபோது ஆளில்லா ரயில் கிராசிங்கை ஒரு வேன் கடக்க முயன்றதை ரயில் டிரைவர் பார்த்துள்ளார்.
![]() |
ரயிலை நிறுத்த முடியாத வேகத்தில் அது வந்து கொண்டிருந்ததால் பலமாக ஹாரன் எழுப்பி, வேன் டிரைவரை ரயில் டிரைவர் எச்சரித்துள்ளார். ஆனால் அதையும் மீறி அந்த வேன் வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தண்டவாளத்தின் நடுவே வேன் சிக்கிக் கொண்டது. இதனால் வேகமாக வந்த ரயில் வேன் மீது பயங்கரமாக மோதியது.
![]() |
இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாக இறந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த இடம் முழுவதும் ரத்தமும், சதையுமாக படு கோரமாக காணப்படுகிறது. வேனில் பயணம் செய்த 35 பேரும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவர். அனைவரும் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள குரு பகவான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினர்.
![]() |
சம்பவம் நடந்த இடத்திற்கு காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்து தாறுமாறாக கிடந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்ப உதவினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் இதே இடத்திற்கு அருகே உள்ள புதுப்பாக்கம் என்ற பகுதியில், ஆளில்லா ரயில் கிராசிங்கைக் கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதி 15 பேர் பரிதாபமாக பலியாயினர் என்பது நினைவிருக்கலாம்.
அந்த சம்பவத்திற்குப் பிறகும் அந்த இடத்தில் இன்னும் ரயில்வே கேட் அமைக்கப்படவில்லை என்பது வேதனையான செய்தி. இப்போது அதேபோன்ற ஒரு விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்















Click it and Unblock the Notifications