சங்கரராமன் கொலை வழக்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி:காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது தொடரப்பட்ட சங்கரராமன் கொலை வழக்கு வரும் ஜூன் மாதம் 6ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி சின்னபாண்டி விசாரித்து வரும் சங்கரராமன் வழக்கு வரும் ஜூன் மாதம் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சி ஜெயந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருத்தப்படும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 24 குற்றவாளிகளில் 11 பேர் ஆஜராகினர்.
ஜெயந்திரர், விஜயேந்திரர் நீதிமன்றத்திற்கு வராததற்கு அவருடை வழக்கறிஞர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அரசு வழக்கறிஞார தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராவதற்கு தடை கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த சிறப்பு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
புதிய வழக்கறிஞரை நியமிக்கும் வரை இந்த வழக்கை விசாரிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications