தூக்கம்: விமானம் ஓட்ட மறுத்த விமானி
டெல்லி:சரியான தூக்கம் இல்லாததால் விமானத்தை ஓட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி மறுத்துவிட்டார். இதனால் அந்த விமானம் 13 மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை லண்டனுக்கு கிளம்ப இருந்தது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்.
பயணிகள் அனைவரும் ஏறிவிட்ட நிலையில், திடீரென விமானத்தை இயக்க விமானி மறுத்தார்.
டெல்லியில் தான் தங்கிய ஓட்டலில் கடும் சத்தம் நிலவியதாகவும் இதனால் தன்னால் சரியாக தூங்க முடியவில்லை என்றும் விமானி தெரிவித்தார்.
இதனால் விமானத்தை இயக்க முடியாது என்றார்.
இதையடுத்து விமானத்தில் இருந்த 225 பயணிகளும் இறக்கப்பட்டு, ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
13 மணி நேரம் தாமதத்துக்குப் பின் விமானம் கிளம்பிச் சென்றது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விதிப்படி விமானி, தனக்கு போதிய ஓய்வு இல்லை என்று கருதினால் விமானத்தை இயக்க வேண்டியதில்லை.












Click it and Unblock the Notifications