பிரேம்குமார் டிஸ்மிஸ் ஆகவில்லை: அரசு
சென்னை:எஸ்.பி. பிரேம்குமார் இன்னும் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை. ஏன் டிஸ்மிஸ் செய்யக் கூடாது என்று கேட்டு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் சர்வ வல்லமை படைத்த எஸ்.பியாக இருந்தவர் பிரேம்குமார். இவரை வைத்து பண்ருட்டி பாமக எம்.எல்.ஏ வேல்முருகனை டபாய்த்தார் ஜெயலலிதா.
பின்னர் வந்தது சங்கரராமன் கொலை வழக்கு. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியாக மாற்றப்பட்ட பிரேம்குமார், விசாரணை அதிகாரியை ஓரம் கட்டி விட்டு தானே நேரடி விசாரணையில் இறங்கினார். ஜெயேந்திரரை அதிரடியாக கைது செய்தார்.
இந்த வழக்குக்குப் பின்னர் அவர் சென்னை சிபிசிஐடி எஸ்.பியாக மாற்றப்பட்டார். இந்த நிலையில் அப்ரூவர் ரவிசுப்ரமணியத்தை மிரட்டியதாக பிரேம்குமார் மீது திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி இன்ஸ்பெக்டராக இருந்தபோது நல்லகாமன் என்ற முன்னாள் ராணுவ வீரரை கையில் சங்கிலி கட்டி தெருத் தெருவாக ஊர்வலமாக இழுத்துச் சென்றும், தாக்கியும் சித்திரவதை செய்த வழக்கில் பிரேம்குமாருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை 1 மாத சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
இந்தச் சூழ்நிலையில், அரசியல் சட்டத்தின் 311வது பிரிவின் கீழ் பிரேம்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப் பிரிவின் கீழ் பிரேம்குமார் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், தேச விரோத செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீதுதான் இந்த சட்டப் பிரிவு பயன்படுத்தப்படும்.
இதுவரை 2 முறை மட்டுமே இந்த சட்டப் பிரிவின் கீழ் தமிழக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் மாமண்டூர் அருகே விடுதலைப் புலிகளை தப்ப விட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் மீது இச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அடுத்து, மதுரை திருமங்கலத்தில் இமாம் அலி உள்ளிட்டோர் தப்பிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது இந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சட்டப் பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்குத்தான் உள்ளது. எனவே பிரேம்குமார் இந்த சட்டப் பிரிவின் கீழ் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தால் ஆளுநர் மாளிகை முறைப்படியான அறிக்கையை வெளியிட்டிருக்கும்.
ஆனால் எங்களுக்குத் தெரிந்து இதுவரை பிரேம்குமார் மீது 311வது பிரிவின் கீழ் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அதேசமயம், கிரிமினல் சட்டப்பட்டி நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட உங்களை ஏன் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கக் கூடாது என்று கேட்டு பிரேம்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்ட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலையில் நேற்று இரவு அரசு வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பிலும், பிரேம்குமார் டிஸ்மிஸ் ஆனதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications