மதுரை இலந்தைக்குளத்தில் அமையும் ஐடி பார்க்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரையில் 28.91 ஏக்கர் நிலத்தில் சாப்ட்வேர் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கருணாநிதி,
மதுரை வடக்கு வட்டம் இலந்தைக்குளம் கிராமத்தில் நில உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ள 28.91 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் 1 மில்லியன் சதுர அடி பரபளவில் ஒரு தகவல் தொழில் நுட்பவியல் கட்டிடம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்பந்தம் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
சென்னையில் உள்ள டைட்டல் பூங்கா இருப்பது போல கோவை, மதுரையிலும் டைடல் பூங்கா அமைக்கப்படும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். அதில் நானே கலந்து கொள்ள இருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications