கருணாநிதி பொன்விழா-கலாம் வர மறுப்பு
சென்னை:சட்டசபையில் கலைஞர் பொன்விழாவின் ஒரு பகுதியாக சட்டசபையில் உரையாற்ற வருமாறு தமிழக சட்டசபை சபாநாயகர் விடுத்த வேண்டுேகாளை ஏற்க முடியாத நிலை இருப்பதாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை உறுப்பினராகி 50 ஆண்டுகளை முதல்வர் கருணாநிதி பூர்த்தி செய்துள்ளதால், இதையொட்டி சட்டசபையில் இரு நாள் கொண்டாட்டத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மே 11ம் தேதி சட்டசபையில் உரை நிகழ்த்த வருமாறு கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சபாநாயர் ஆவுடையப்பன் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் வெளிநாடு போவதால், சட்டசபையில் உரை நிகழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் சட்டசபையில் இன்று வாசித்தார். ஆவுடையப்பன் கூறுகையில், வெளிநாடு செல்வதால், சட்டசபையில் உரை நிகழ்த்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திட்டமிட்டபடி சட்டசபையில் உரை நிகழ்த்துவார். மறு நாள் நடைபெறும் பாராட்டு விழாவிலும் பங்கேற்பார்.
மேலும், சட்டசபைக் கூட்டத் தொடரை மே 11ம் தேதிக்குப் பதில் 12ம் தேதி வரை நீட்டிக்க சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது என்றார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சட்டசபையில் உரை நிகழ்த்துவதற்கு எதிர்க்கட்சியான அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிைலயில் கலாம் தனது இயலாமையை தெரிவித்து கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்த கலாம் மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியல் கலாமை உரை நிகழ்த்த வருமாறு அப்போதைய சபாநாயகர் காளிமுத்து அழைப்பு விடுத்தார்.
ஆனால் சட்டசபையில் ஜனநாயகம் இல்ைல. எனவே உரை நிகழ்த்துவதைத் தவிர்க்கவும் என குடியரசுத் தலைவருக்கு அப்போதைய எதிர்க்கட்சியான திமுக கோரிக்ைக விடுத்தது. அந்தப் பின்னணியில் காளிமுத்துவின் அழைப்பை ஏற்கவில்லை கலாம் என்பது நினைவிருக்கலாம்.
-
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications