கருணாநிதி பொன்விழா-கலாம் வர மறுப்பு
சென்னை:சட்டசபையில் கலைஞர் பொன்விழாவின் ஒரு பகுதியாக சட்டசபையில் உரையாற்ற வருமாறு தமிழக சட்டசபை சபாநாயகர் விடுத்த வேண்டுேகாளை ஏற்க முடியாத நிலை இருப்பதாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
சட்டசபை உறுப்பினராகி 50 ஆண்டுகளை முதல்வர் கருணாநிதி பூர்த்தி செய்துள்ளதால், இதையொட்டி சட்டசபையில் இரு நாள் கொண்டாட்டத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மே 11ம் தேதி சட்டசபையில் உரை நிகழ்த்த வருமாறு கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு சபாநாயர் ஆவுடையப்பன் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் வெளிநாடு போவதால், சட்டசபையில் உரை நிகழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் சட்டசபையில் இன்று வாசித்தார். ஆவுடையப்பன் கூறுகையில், வெளிநாடு செல்வதால், சட்டசபையில் உரை நிகழ்த்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திட்டமிட்டபடி சட்டசபையில் உரை நிகழ்த்துவார். மறு நாள் நடைபெறும் பாராட்டு விழாவிலும் பங்கேற்பார்.
மேலும், சட்டசபைக் கூட்டத் தொடரை மே 11ம் தேதிக்குப் பதில் 12ம் தேதி வரை நீட்டிக்க சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது என்றார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சட்டசபையில் உரை நிகழ்த்துவதற்கு எதிர்க்கட்சியான அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிைலயில் கலாம் தனது இயலாமையை தெரிவித்து கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்த கலாம் மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியல் கலாமை உரை நிகழ்த்த வருமாறு அப்போதைய சபாநாயகர் காளிமுத்து அழைப்பு விடுத்தார்.
ஆனால் சட்டசபையில் ஜனநாயகம் இல்ைல. எனவே உரை நிகழ்த்துவதைத் தவிர்க்கவும் என குடியரசுத் தலைவருக்கு அப்போதைய எதிர்க்கட்சியான திமுக கோரிக்ைக விடுத்தது. அந்தப் பின்னணியில் காளிமுத்துவின் அழைப்பை ஏற்கவில்லை கலாம் என்பது நினைவிருக்கலாம்.
-
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications