கிட்னி திருட்டு: 2 மருத்துவமனைகளின் உரிமம்ரத்து- அப்பல்லோவுக்கு நோட்டீஸ்
சென்னை: சிறுநீரகத் திருட்டு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இரு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மக்களை ஏமாற்றி சிறுநீரகம் திருடப்படுவது குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதில் கலந்து கொண்டு பேசதிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், சென்னையில் மக்களை ஏமாற்றி அவர்களுடைய சிறுநீரகங்கள் திருடப்படுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், தவறு செய்யும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளை நெறிப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும் என்றார்.
விவாதத்திற்குப் பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேசுகையில், சென்னை மற்றும் திருச்சியில் சிறுநீரக திருட்டில் சம்பந்தப்பட்ட புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமம் தமிழகத்தில் 54 மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 4 அரசு மருத்துவமனைகளும், 49 தனியார் மருத்துவமனைகளும், பிற மாவட்டங்களில் 26 மருத்துவமனைகளும் உள்ளன.
சிறுநீரக திருட்டு சம்பந்தமாக சென்னையில் உள்ள எம்.ஆர் மருத்துவமனை மற்றும் அஸ்வினி மருத்துவமனை ஆகியவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அப்பல்லோ, ஏ.பி.சி., வேதநாயகம் ஆகிய மருத்துவமனைகளின் உரிமங்களை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 9 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின்போது உறவினர்கள் மட்டுமே சிறுநீரகத்தை தானமாக தரவேண்டும். அப்படி கொடுக்கும் உறவினர்கள் சொத்தில் பங்கு கேட்பதால் நோயாளிகள் தயங்குகின்றனர். இதனால் வேறு நபரிடமிருந்து சிறுநீரகம் பெறுகின்றனர்.
இதற்கு மாற்று வழி குறித்து ஆராயப்பட்டு வருகிறது. நோயாளிகளை பாதிக்காத வகையில் சிறுநீரக திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம்












Click it and Unblock the Notifications