தற்கொலைப் படை விடுதலைப் புலி சுட்டுக் கொலை
கொழும்பு:விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் ெகான்றதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
இதுெதாடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள நாகர்ேகாவில் பகுதியில், ராணுவ பாதுகாப்பு பகுதிக்குள் ஊடுறுவ முயன்ற விடுதலைப் புலி வீரர் ஒருவரை ராணுவம் சுட்டுக் ெகான்றது. இவர் தற்கொலைப் படையைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்ேதகிக்கிறோம்.
இதற்கிடையே, நேற்று மாலை யாழ்குடாவில் உள்ள தென்மராச்சி பகுதியில் மடுவில் என்ற இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த எட்டு கிேலா எடை கொண்ட கண்ணி வெடி கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அந்த கண்ணிவெடி டெட்டனேட்டருடன் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்ணி வெடி வெடித்திருந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றார்.
இந்த நிலையில், நேற்று இலங்கை விமானப் படை நடத்திய தாக்குதலில் வட்டப்பாளை என்ற இடத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் சேதமடைந்ததாக விமானப்படை கூறியுள்ளது. முல்லைத் தீவு மாவட்டத்தில் இந்த முகாம் உள்ளது.












Click it and Unblock the Notifications