உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளகாவிரி மனு: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூர்:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள சிறப்பு விடுப்பு மனு மற்றும் விளக்கம் கோரும் மனுவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து இன்று நடந்த கர்நாடக அமைச்சரைவக் கூட்டத்திற்குப் பின்னர் அம்மாநில உள்துறை அமைச்சர் எம்.பி.பிரகாஷ் கூறுகையில், பெங்களூர் நகரின் மூன்றில் இரண்டு மடங்கு பகுதியின் குடிநீர்த் தேவையை காவிரி நடுவர் மன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. இதற்கு அமைச்சரைவயில் கவலை தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய சிறப்பு விடுப்பு மனு மற்றும் விளக்க மனுவில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. அனைத்து முன்னெச்சரிக்கை அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டது. அண்டை மாநிலங்களின் வாதங்கள் குறித்தும் கவனமாக விவாதிக்கப்பட்டது.
கர்நாடகம் எப்படி மனு தாக்கல் செய்கிறதோ அதன் அடிப்படையில்தான் தான் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எனவே கர்நாடக அரசின் மனுவில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ்.












Click it and Unblock the Notifications