குன்னூரில் இந்திய-சீன எல்லை பேச்சுவார்த்தை
உதகமண்டலம்:இந்தியா மற்றும் சீன எல்லை குறித்த பேச்சுவார்த்தை இன்று இரவு குன்னூரில் தொடங்குகிறது. இது 2 நாட்கள் நடைபெறும்.
இந்தியா-சீனா எல்லை பிரச்சனை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் இருநாடுகளுக்கு இடையே முதல் கட்ட பேச்சு வார்த்தை குன்னூரில் இன்று இரவு தாஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 23ம் தேதி நடைபெறும்.
இந்திய சீன எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தலைமையில், வெளியுறவுதுறையின் உயரதிகாரிகளும், இந்தியாவிற்கான சீன தூதரரும் கலந்து கொள்கின்றனர்.
சீனாவின் சார்பில் சீன வெளியுறவுதுறை இணை அமைச்சர் தாய் பிங்கோ தலைமையில் 10 பேர் கொண்ட சீன குழு இந்தியா வந்துள்ளது. இவர்களுடன் சீனாவிற்கான இந்திய தூதரும் வந்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள தாஜ் ஹோட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வந்த சீன அதிகாரிகள் இன்று காலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தனர். பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் குன்னூரருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் ஊட்டி மற்றும் குன்னூர் சுற்றுலா இடங்களுக்கு செல்லவுள்ளதால் அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications