குன்னூரில் இந்திய-சீன எல்லை பேச்சுவார்த்தை
உதகமண்டலம்:இந்தியா மற்றும் சீன எல்லை குறித்த பேச்சுவார்த்தை இன்று இரவு குன்னூரில் தொடங்குகிறது. இது 2 நாட்கள் நடைபெறும்.
இந்தியா-சீனா எல்லை பிரச்சனை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் இருநாடுகளுக்கு இடையே முதல் கட்ட பேச்சு வார்த்தை குன்னூரில் இன்று இரவு தாஜ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 23ம் தேதி நடைபெறும்.
இந்திய சீன எல்லை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தலைமையில், வெளியுறவுதுறையின் உயரதிகாரிகளும், இந்தியாவிற்கான சீன தூதரரும் கலந்து கொள்கின்றனர்.
சீனாவின் சார்பில் சீன வெளியுறவுதுறை இணை அமைச்சர் தாய் பிங்கோ தலைமையில் 10 பேர் கொண்ட சீன குழு இந்தியா வந்துள்ளது. இவர்களுடன் சீனாவிற்கான இந்திய தூதரும் வந்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள தாஜ் ஹோட்டலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வந்த சீன அதிகாரிகள் இன்று காலை கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தனர். பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் குன்னூரருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் ஊட்டி மற்றும் குன்னூர் சுற்றுலா இடங்களுக்கு செல்லவுள்ளதால் அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
கேஸ் தட்டுப்பாடு! கோவையில் அடுப்பே இல்லாமல் 2000 டிஷ்! தேங்காயில் தயிர்! படையல் சிவா அசத்தல் -
கோவை வடவள்ளி நர்ஸ் கனிதா சஸ்பெண்ட்.. சமூக ஆர்வலரால் நடந்த பெரிய ட்விஸ்ட் -
பைத்தியக்காரனாவே நெனச்சுட்டு இருக்கல நீ.. சைலண்டாக வேலை பார்த்த ஈரான்.. கள்ள மெளனம் காக்கும் சீனா! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
சாம்பாரில் பல்லி.. கோவை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 44 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி











Click it and Unblock the Notifications