பூணூல் அறுப்பு - பெரியார் சிலை உடைப்புதஞ்சை, திருவாரூரில் பரபரப்பு
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் 2 அர்ச்சகர்கள் தாக்கப்பட்டு அவர்களின் பூணூல்கள் அறுக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் பெரியார் சிலையின் தலையை சில விஷமிகள் துண்டித்ததால் பரபரப்பு நிலவுகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர் வேம்பு அய்யர். இவர் நேற்று மதிய பூஜை முடிந்த பின்னர் தனது வீட்டுக்குக் கிளம்பினார்.
கோவிலுக்கு வெளியே அவர் வந்தபோது, 2 பேர் வேம்புவை வழிமறித்துத் தாக்கினர். பின்னர் அவரது பூணுலையும் அறுத்து எறிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் வாசலில் நின்றிருந்த போலீஸாரிடம் விரைந்து சென்று வேம்பு இதுகுறித்துப் புகார் செய்தார். உடனடியாக விரைந்த போலீஸார் பூணுலை அறுத்து வேம்புவைத் தாக்கிய திராவிட மணி, பிரபாகரன் ஆகிய இரு வாலிபர்களையும் கைது செய்தனர்.
இதேபோல, கரந்தை சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் ராமானுஜம் என்பவரை பூஜை முடிந்து வீடு திரும்பியபோது 3 பேர் வழிமறித்து தாக்கி, பூணூலை அறுத்து எறிந்து விட்டுத் தப்பினர். அவர்களைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.
பெரியார் சிலை தலை துண்டிப்பு:
இதற்கிடையே, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பெரியார் சிலையின் தலையை சில விஷமிகள் துண்டித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
முத்துப்பேட்டை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலையின் தலையை சில விஷமிகள் துண்டித்து சேதப்படுத்தினர். இந்தத் தகவல் பரவியதும், தி.க, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் அங்கு கூடினர்.
மதிமுகவை சேர்ந்த பழனிவேல் என்பவர் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார். இந்த சிலை கடந்த 1996ம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால் திறந்து வைக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டு இந்த சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மறுபடியும் தாக்குதல் நடத்தப்பட்டு இம்முறை தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
சிலையை அவமானப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இட்லி, தோசை கடைகள் தமிழ்நாட்டில் திணறுதா? 28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? மக்கள் அவலம் -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications