திருவாரூர்-விமரிசையாக நடந்த ஆழித் தேரோட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூரில் புகழ் பெற்ற ஆழித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
திருவாரூரில் உள்ள புகழ் பெற்ற தியாகராஜ சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பங்குனிப் பெருவிழா விமரிசையாக ெகாண்டாடப்படும். அதன் ஒரு பகுதியாக ஆழித் தேரோட்டம் நடைபெறும்.
![]() |
நேற்று ஆழித் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பிரமாண்டமான தேர் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜவஹர், திருவாரூர் டி.ஆர்.ஓ. மகேஷ்வரி உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். ஹைட்ராலிக் பிரேக்குடன் இந்த தேர் செலுத்தப்பட்டதால் எந்த இடத்திலும் பிரச்சினை வராமல் தேரோட்டம் நடந்தது.
தேரின் முன்பாக இரண்டு புல்டோசர்களும் பயன்படுத்தப்பட்டு ேதர் இழுத்துச் ெசல்லப்பட்டது.
தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டையில் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நடந்ததால், ஆழித் தேரோட்டத்தின்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.













Click it and Unblock the Notifications