குற்றங்கள் குறைந்து விட்டன: கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் குற்றச் செயல்கள் குறைந்து சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று சட்டசபையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மதுவிலக்குத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விளக்க குறிப்புகளை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார்.
இவற்றைத் தாக்கல் செய்து கருணாநிதி பேசுகையில், இந்த வருடம் காவல் துறையினர் திறமுடன் செயல்பட்டதன் மூலமாக தமிழகத்தில் பெரிய அளவில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் உருவாகவில்லை. ஜாதி மத மோதல்கள் நடப்பதும் தடுக்கப்பட்டுள்ளது.
சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக சட்டம், ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட சூழ்நிலை, தென்காசியில் நடந்த கொலை ஆகிய பிரச்சினைகள் சிறப்பாக கையாளப்பட்டு வன்முறை பரவாமல் தடுக்கப்பட்டது.
பயங்கரமான கொள்ளையர்களான கிரில் கொள்ளை கும்பலை சென்னையில் கைது செய்யப்பட்டனர்.
இரும்பு குண்டுகள் கடத்தியதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ததன் மூலம் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் காவல்துறை தனது திறமையை காட்டியுள்ளது. தமிழகத்தில் குற்றநிகழ்வுகள் குறைந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது.
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு ரூ.20 கோடியே 31 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்ட அரசு அனுமதியளித்துள்ளது.
காவல்துறை நவீன மயமாக்க ரூ.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.புதிய தொழில் நுட்பத்தின் வடிவமைக்கப்பட்ட அதிநவீன கருவிகள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
10 மாவட்டங்களில் 20 போக்குவரத்து காவல்நிலையங்களும், 10 நடமாடும் நீதிமன்றங்களும் அமைக்கப்படும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றார் கருணாநிதி.
-
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கிண்டி மேம்பாலத்தில் கைமாறிய 1.5 கிலோ தங்கம்.. சென்னை ஜிஎஸ்டி ஆபீசர் யாருனு பார்த்தால்? செம ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications