For Daily Alerts
Just In
கருணாநிதி பிறந்த நாள்: அரசு சார்பில்2 லட்சம் மரக் கன்றுகள் நடத் திட்டம்
சென்னை:முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறியுள்ளார்.
சட்டசபையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் முதல்வர் கருணாநிதியன் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியன்று 2 லட்சம் மரக் கன்றுகள் நடப்படும்.
மாநிலத்தில் உள்ள மாநில அரசின் நெடுஞ்சாலைகள், அரசு சாலைகளில் இரு புறங்களிலும் இந்த மரக் கன்றுகள் நடப்படும். நெடுஞ்சாலைத் துறையே இந்த மரக் கன்றுகளை வளர்த்துப் பராமரிக்கும் என்றார் சாமிநாதன்.
இதைக் கேட்டதும் திமுக உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
karunanidhi கருணாநிதி tamil nadu சட்டசபை பிறந்த நாள் thatstamil முதல்வர் ஜூன் tamilnadu chief minister tamil news national highway local body election tn political
Story first published: Wednesday, April 25, 2007, 5:30 [IST]