பஸ் மோதி 4 இளைஞர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:தஞ்சையில் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நான்கு இளைஞர்கள் பஸ் மோதி பரிதாபமாக இறந்தனர்.
விபத்தில் பலியான நான்கு இளைஞர்களும் தஞ்சாவூரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர். தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில், நாடார் பள்ளம் என்ற இடத்தில், ஒரு பாலத்தில் மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த பேருந்து பயங்கரமாக மோதியது.
இதில், நான்கு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். நான்கு பேரும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications