ராமேஸ்வரம் கோவில் கோபுரத்தில் விரிசல்!
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் தொன்மையானது, புராதனமானதாகும். இக்கோவிலின் பிரகாரம் ஆசியாவிலேயே மிகவும் நீளமானதாகும்.
காசிக்குப் புனிதப் பயணம் செல்பவர்கள் ராமேஸ்வரத்தில்தான் அதை முடிக்க வேண்டும் என்ற சம்பிரதாயமும் இந்து சமூகத்தினரிடம் உள்ளது.
ராமநாதசுவாமி கோவிலில் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. இதில் கிழக்கு ராஜகோபுரத்தை ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர் 1649ம் ஆண்டு கட்டினார்.
இந்த ராஜகோபுரம் 126 அடியில் 9 நிலைகளைக் ெகாண்டதாகும். இந்தக் கோபுரத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
விரிசலை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications