தமிழக துறைமுகத்தை தாக்க லஷ்கர் திட்டம்: -உளவுப் பிரிவு எச்சரிக்கை
சென்னை:தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் பயங்கர தற்கொலை படைத் தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்த சிலர் ஊடுருவியுள்ளனர் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு முன்பே மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் தமிழக அரசும், காவல்துறையும் எடுக்காமல் இருப்பதாக உளவுப் பிரிவு அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முக்கியத் துறைமுகம் ஒன்றில் பெரிய அளவுக்கு தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு கராச்சியில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தற்கொலைப் படைப் பிரிவு தற்போது தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளது. எந்தத் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்படும் என தெரியவில்லை. ஆனால் மிக முக்கிய துறைமுகத்தைத் தாக்கித் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
அந்தத் துறைமுகம் சென்னையாகவும் இருக்கலாம் அல்லது தூத்துக்குடியாகவும் இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு 2 மாதங்களாகியும் தமிழக காவல்துறை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று உளவுப் பிரிவு அதிருப்தி தெரிவித்துள்ளதாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கபடவில்லை என்று உளவுப் பிரிவு அதிகாரிகள் தமிழக அரசிடம் அதிருப்தி தெரிவித்துள்ளனராம்.
அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநில காவல்துறை தலைமை ஆகியவற்றுக்கு ஏற்கனவே தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
இருப்பினும் விடுதலைப் புலிகளால் தமிழகத்திற்கோ, இந்தியாவுக்கோ, இந்திய அரசியல் தலைவர்களுக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
புலிகளுக்கு இந்த சமயத்தில் இந்தியாவின் ஆதரவு மிகவும் அவசியம். எனவே இந்தியத் தலைவர்களை அவர்கள் குறி வைக்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவு என்று உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications