தமிழக துறைமுகத்தை தாக்க லஷ்கர் திட்டம்: -உளவுப் பிரிவு எச்சரிக்கை
சென்னை:தமிழகத்தில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் பயங்கர தற்கொலை படைத் தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்த சிலர் ஊடுருவியுள்ளனர் என மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக 2 மாதங்களுக்கு முன்பே மத்திய உளவுப் பிரிவு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் தமிழக அரசும், காவல்துறையும் எடுக்காமல் இருப்பதாக உளவுப் பிரிவு அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முக்கியத் துறைமுகம் ஒன்றில் பெரிய அளவுக்கு தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்காக சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு கராச்சியில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தற்கொலைப் படைப் பிரிவு தற்போது தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ளது. எந்தத் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்படும் என தெரியவில்லை. ஆனால் மிக முக்கிய துறைமுகத்தைத் தாக்கித் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
அந்தத் துறைமுகம் சென்னையாகவும் இருக்கலாம் அல்லது தூத்துக்குடியாகவும் இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு 2 மாதங்களாகியும் தமிழக காவல்துறை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று உளவுப் பிரிவு அதிருப்தி தெரிவித்துள்ளதாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கபடவில்லை என்று உளவுப் பிரிவு அதிகாரிகள் தமிழக அரசிடம் அதிருப்தி தெரிவித்துள்ளனராம்.
அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநில காவல்துறை தலைமை ஆகியவற்றுக்கு ஏற்கனவே தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
இருப்பினும் விடுதலைப் புலிகளால் தமிழகத்திற்கோ, இந்தியாவுக்கோ, இந்திய அரசியல் தலைவர்களுக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
புலிகளுக்கு இந்த சமயத்தில் இந்தியாவின் ஆதரவு மிகவும் அவசியம். எனவே இந்தியத் தலைவர்களை அவர்கள் குறி வைக்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவு என்று உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications