வீரப்பன் வதம்-போலீசாருக்கு வருமான வரி நோட்டீஸ்
சென்னை:சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற தமிழக சிறப்பு அதிரடிப்படை போலீஸாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக, தமிழக அரசுக்கு சிம்ம செம்பானமாக விளங்கியன் வீரப்பன். காட்டில் தனக்கென ஒரு ராஜங்கத்தை அமைத்து கர்நாடக, தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக நிகழ்ந்த வீரப்பனை டிஜிபி விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் தர்மபுரி மாவட்டம் அருகே சுட்டு கொன்றனர்.
இதை பாராட்டி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருதுடன் பரிசுகள் வழங்கினார். அதன்படி அதிரடி படையினருக்கு சென்னையில் வீட்டுமனை, ரூ. 3 லட்சம் ரொக்கப் பணம் பதவி உயர்வு போன்றவை வழங்கப்பட்டது.
இந்நிலையில் வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட போலீஸாருக்கு வருமான வரி துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அரசு கொடுத்த ரூ.3 லட்சத்துக்கு வரி கட்டாதது ஏன், அதற்குரிய வரி கட்டுங்கள் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications