For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவை கொல்ல திட்டம் தீட்டியது போபர்ஸ்குவாத்ராச்சி?- புலிகளை பயன்படுத்தினார்??

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:ராஜிவ் காந்தியை கொல்ல சதித் திட்டம் தீட்டியது போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய தொழிலதிபர் குவாத்ராச்சி தான் எனவும், தனது கொலைத் திட்டத்துக்கு புலிகளை அவர் பயன்படுத்தியதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஒரு இணையத் தளம் வெளியிட்டுள்ள செய்தியால் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாஜக, சமாஜ்வாடி கட்சி ஆகியவை பிரச்சனை கிளப்பின.

Quattrocchi

ராஜிவைக் கொல்லும் திட்டம் தீட்டப்பட்டது பிரான்சில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தான் என அந்த இணையத் தளம் கூறியுள்ளது.

1989ம் ஆண்டு தேர்தலில் ராஜிவ் தோற்பது உறுதி என நம்பிய குவாத்ராச்சி, எதிர் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் ராஜிவை வைத்தே போபர்ஸ் விவகாரத்தில் தன்னை சிக்க வைத்துவிடுவார்கள் என்று அஞ்சியதாகவும், இதற்காக ராஜிவை ஒழித்துக் கட்ட முடிவு செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

புலிகளின் ஆலோசகராக இருந்த மறைந்த ஆண்டன் பாலசிங்கத்தை குவாத்ராச்சி அந்த ஹோட்டலில் வைத்து சந்தித்துப் பேசியதாகவும்,அவர்களது பேச்சை பிரஞ்சு உளவுத்துறை ரகசியமாக பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

போபர்ஸ் சிக்கலில் இருந்து வெளியே வர ராஜிவை கொலை செய்ய குவாத்ராச்சி திட்டமிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இணையத் தளத்தின் இந்த செய்தியால் இன்று நாடாளுமன்றத்தில் ெபரும் பரபரப்பு நிலவியது.

பாஜக எம்பிக்கள் இந்த பிரச்சனையக் கிளப்பி பேசுகையில், இணையத் தளத்தின் செய்தி குறித்து பிரான்ஸ் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் இதை முழுமையாக விசாரிக்க வேண்டும். ஆனால், அரசு மெளனம் சாதிப்பது ஏன் என்றனர்.

இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி நிலவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X