2011 உலகக் கோப்பை கிரிக்கெட்இந்தியா, பாக், இலங்கை, வங்கதேசத்தில் நடக்கிறது
டெல்லி:10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 2011ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன.
9வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த போட்டியை ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன.
10வது உலகக் கோப்பைப் போட்டியை நடத்த ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்த முயன்றன. ஆனால் ஆசிய நாடுகள் இதைத் தட்டிச் சென்று விட்டன.
10வது உலக்க கோப்பைப் போட்டியின் தொடக்க விழா வங்கதேசத்தில் நடைபெறும். மொத்தம் 53 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவில் 22 போட்டிகளும், பாகிஸ்தானில் 16, இலங்கையில் 9, வங்கதேசத்தில் 6 போட்டிகளும் நடைபெறும்.
ஒரு அரை இறுதிப் போட்டி கொழும்பிலும், இன்னொரு அரை இறுதிப் போட்டி லாகூரிலும் நடைபெறும். இறுதிப் போட்டி மும்பையில் நடைபெறுகிறது.
இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, நாக்பூர், சண்டிகர், அகமபாதாபாத் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதற்கு முன்பு ஆசிய நாடுகள் இணைந்து (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை) கடந்த 1987ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தியுள்ளன. அப்போது ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது. தற்போது 2வது முறையாக கூடுதலாக வங்கதேசத்தையும் சேர்த்துக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த முறையாவது இந்தியா கப் வாங்குமா அல்லது கட்டையைக் கொடுக்குமா?












Click it and Unblock the Notifications