சென்னை ரெளடியை கொன்ற நண்பன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையை சேர்ந்த பிரபல ரெளடியை அவனது நண்பனே கொலை செய்தான்.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ரவுடி வாசுதேவன்(35). 2 கொலைகள் உள்பட 14 வழக்குகளில் சம்பந்தப்பட்டவன்.
இவனுக்கும் பல்லாவரத்தை சேர்ந்த இவனது நண்பன் லியாகத் அலி கான் என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இதில் வாசுதேவனை லியாகத் இரும்பு ராடினால் பலமாக தாக்கியதில், வாசுதேவன் அதே இடத்தில் விழுந்து இறந்தான்.
இதையடுத்து லியாகத் பல்லாவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த வாசுதேவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications