12 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: டிஜிபி
சென்னை:கடத்தப்பட்ட 12 குமரி மாவட்ட மீனவர்களும் இலங்கையில் பாதுகாப்பாக உள்ளதாக டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 2 மாதங்களாக காணவில்லை. அவர்களை விடுதலைப் புலிகள்தான் கடத்திச் சென்றுள்ளதாக டிஜிபி முகர்ஜி சமீபத்தில் தெரிவித்தார்.
மேலும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களையும் புலிகளின் கடல் புலிகள் பிரிவினர் தான் கொன்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதை விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று மறுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகர்ஜியிடம் 12 மீனவர்கள் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, எங்களுக்குக் கிடைத்த தகவல்படி 12 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றார். விடுதலைப் புலிகள் இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications