பெண் கலெக்டர் திருமண வரவேற்புக்காகஊட்டியிலிருந்து பறந்து வந்த ஜெ.
சென்னை:சென்னையில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுவர்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் கோவைக்குச் சென்றார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு வார கால ஓய்வுக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தார். உடன் சசிகலாவும் சென்றிருந்தார்.
![]() |
இந்த நிலையில் நேற்று மாலை அவசரமாக கோவை வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் ஜெயலலிதா. கூடவே சசிகலாவும் வந்தார்.
இருவரும் நேராக வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்டார்.
அது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுவர்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாகும்.
குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சித் தலைவர் சுவர்ணா. தஞ்சையைச் சேர்ந்த சீனிவாசன்-சுலோச்சனா தம்பதியினரின் மகள் ஆவார். டாக்டர் பட்டம் பெற்ற சுவர்ணா, 1997ம ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
நெல்லையில் முதலில் துணை ஆட்சியராக பணியாற்றினார். பின்னர் பல்வேறு உயர் பதவிகளை வகித்து தற்போது குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
இவருக்கும் ரகுநந்தனுக்கும் நேற்று காலை திருமணம் நடந்தது. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜெயலலிதா அவசரம் அவசரமாக தனி விமானம் பிடித்து வந்துள்ளார்.
மணமக்களை வாழ்த்திய பின்னர் அங்கிருந்து கிளம்பிய ஜெயலலிதா, தான் வந்த அதே விமானத்தில் மீண்டும் கோவை திரும்பினார்.
ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரராக ஜெயலலிதாவால் குறிப்பிடப்படும் வைகுண்டசாமியைக் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திமுக அரசு துடிக்கிறது. அவரது தொழிலை நசுக்க துடிக்கிறது என்று சமீபத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
வைகுண்டசாமி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் சுவர்ணா ஒத்துக் கொள்ளாததால், அவரை நீண்ட விடுப்பில் செல்லுமாறு அரசு உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் சுவர்ணாவின் திருமண வரவேற்புக்கு ஜெயலலிதா தனி விமானத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
Jayalalithaa: ஜெயலலிதா வீடு பறிமுதல்.. ரூ.1.60 கோடி சொத்து வரி பாக்கியால் ஐதராபாத் மாநகராட்சி நடவடிக்கை -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!













Click it and Unblock the Notifications