பெண் கலெக்டர் திருமண வரவேற்புக்காகஊட்டியிலிருந்து பறந்து வந்த ஜெ.
சென்னை:சென்னையில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுவர்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் கோவைக்குச் சென்றார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு வார கால ஓய்வுக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தார். உடன் சசிகலாவும் சென்றிருந்தார்.
![]() |
இந்த நிலையில் நேற்று மாலை அவசரமாக கோவை வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினார் ஜெயலலிதா. கூடவே சசிகலாவும் வந்தார்.
இருவரும் நேராக வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்டார்.
அது, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுவர்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாகும்.
குமரி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சித் தலைவர் சுவர்ணா. தஞ்சையைச் சேர்ந்த சீனிவாசன்-சுலோச்சனா தம்பதியினரின் மகள் ஆவார். டாக்டர் பட்டம் பெற்ற சுவர்ணா, 1997ம ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆனார்.
நெல்லையில் முதலில் துணை ஆட்சியராக பணியாற்றினார். பின்னர் பல்வேறு உயர் பதவிகளை வகித்து தற்போது குமரி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.
இவருக்கும் ரகுநந்தனுக்கும் நேற்று காலை திருமணம் நடந்தது. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காகவே ஜெயலலிதா அவசரம் அவசரமாக தனி விமானம் பிடித்து வந்துள்ளார்.
மணமக்களை வாழ்த்திய பின்னர் அங்கிருந்து கிளம்பிய ஜெயலலிதா, தான் வந்த அதே விமானத்தில் மீண்டும் கோவை திரும்பினார்.
ஜெயா டிவியின் முக்கியப் பங்குதாரராக ஜெயலலிதாவால் குறிப்பிடப்படும் வைகுண்டசாமியைக் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திமுக அரசு துடிக்கிறது. அவரது தொழிலை நசுக்க துடிக்கிறது என்று சமீபத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
வைகுண்டசாமி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர் சுவர்ணா ஒத்துக் கொள்ளாததால், அவரை நீண்ட விடுப்பில் செல்லுமாறு அரசு உத்தரவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் சுவர்ணாவின் திருமண வரவேற்புக்கு ஜெயலலிதா தனி விமானத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்













Click it and Unblock the Notifications