கடலோரப் பகுதிகளில் 3 அடுக்கு கண்காணிப்பு
கொல்லம்:இலங்கையில் நிலவும் அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு இந்திய கடலோரப் பகுதியில் 3 அடுக்கு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.
கொல்லத்தில் இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை நிலையை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு அருகே தமிழகமும், கேரளாவும் இருப்பதால் இம்மாநில கடலோரப் பகுதியை முழுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.
கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் கடலோர காவல் நிலைய போலீஸார் ஆகியோரைக் கொண்டு 3 அடுக்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு மாநில கடலோரப் பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள கடலோர காவல் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. பிற கடலோர மாநிலங்களிலும் இதுபோன்ற காவல் நிலையங்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தென் பிரந்திய கடலோர கண்காணிப்பு அதிகரிக்கப்படும். எந்த வழியாக ஆபத்து வந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அந்தோணி.












Click it and Unblock the Notifications