மீனவர்களை கடத்தியது புலிகள் தான்:கடற்புலிகளின் வாக்குமூலம் உள்ளது-டிஜிபி
ென்னை:12 தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் தான் கடத்தினர் என்பதற்கு ஆதாரமாக, கடல் புலிகளின் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்துள்ளோம் என தமிழக காவல்துறை டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
12 தமிழக மீனவர்களை கடத்தவில்லை எனவும், 5 மீனவர்களை சுட்டு கொல்லவில்லை எனவும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து டிஜிபி முகர்ஜியிடம் கேட்டபோது,
12 தமிழக மீனவர்களை கடத்தியது, 5 மீனவர்களை சுட்டுக் கொல்லப்பட்டது ஆகியவை குறித்து பிடிபட்ட விடுதலைப் புலிகளின் கடல் புலி பிரிவினர் பற்றியும் கியூ பிரிவிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதனை வீடியோவில் பதிவு செய்துள்ளோம்.
சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடல் வழியாக அன்னிய சக்திகள் ஊடுருவலை தவிர்க்க 12 கடலோர மாவட்ட காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ரோந்து பணியும் நடந்து வருகிறது.
சோதனை சாவடிகளில் இருக்கும் காவல்துறையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களையும் கண்காணிக்கும்படி உளவுப் பிரிவு காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications