கெளசர் பீபி கற்பழித்து, விஷம் வைத்துக் கொலை
அகமதாபாத்:குஜராத் போலீஸாரால் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட சொராப்தீன் ஷேக்கின் மனைவி கெளசர் பீபியை இன்ஸ்பெக்டர் ஒருவர் கற்பழித்து பின்னர் விஷம் வைத்துக் கொலை செய்து விட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி மனைவி கெளசர் பீபியுடன் அமகதபாத்திலிருந்து சாங்க்லி நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த ஷேக்கையும், கெளசர் பீபியையும் போலீஸார் வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிக் கார் ஒன்றில் கடத்திச் சென்றனர்.
இருவரையும் அகமதாபாத் அருகே திஷா என்ற இடத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் சிறை வைத்தனர். பின்னர் ஷேக்கை மட்டும் அங்கிருந்து அழைத்துச் சென்று 26ம் தேதி போலி என்கவுண்டர் மூலம் கொன்று விட்டனர்.
கெளசர் பீபியை, பாஜக கவுன்சிலர் சுரேந்திர ஜிரவாலாவுக்குச் சொந்தமான கோபா என்ற புறநகர்ப் பகுதியில் உள்ள அர்ஹாம் பங்களாவுக்கு கொண்டு சென்று சிறை வைத்தனர். அவருக்குப் பாதுகாப்பாக ஒரு இன்ஸ்பெக்டர் நிறுத்தப்பட்டார்.
அந்த இன்ஸ்பெக்டர் கெளசர் பீபியை கற்பழித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த கெளசர் பீபி, அனைத்தையும் வெளியில் சொல்லப் போவதாக கூச்சல் போட்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த இன்ஸ்பெக்டர் கெளசர் பீபிக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டு விட்டது.
இன்ஸ்பெக்டரின் பெயர் உள்ளிட்ட விவரத்தை குஜராத் காவல்துறை வெளியிடவில்லை. ஆனால், அவர் தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருபவர் என்று மட்டும் தெரிய வந்துள்ளது. சிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் இத்தகவல்கள் தெரிய வந்துள்ளன. புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது இத்தகவல்களை குஜராத் அரசு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புகார் குறித்து ஜிரவாலா கூறுகையில், கெளசர் பீபி எனது இல்லத்தில் வைத்துக் கற்பழிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. நான் சபர்மதியில் வசித்து வருகிறேன். எப்போதாவதுதான் கோபாவில் உள்ள பங்களாவுக்கு வருவேன். எனது வீட்டின் காவலரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
கெளசர் பீபி கற்பழித்து, விஷம் வைத்துக் கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டதாக புதிதாக வெளியுள்ள தகவல் குஜராத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications