ஏர்-ஹோஸ்டஸிடம் குறும்பு: பயணி கைது
சென்னை:விமானப் பணிப்பெண்ணிடம் குறும்பு செய்து, பயணிகளிடம் ரகளை செய்த குடிகார விமான பயணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஷார்ஜாவிலிருந்து சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் கிளம்பவிருந்த நிலையில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சீட் பெல்ட் போட மாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார்.
அவரை விமான ஊழியர்கள் பெல்ட் போட்டுக் கொள்ளுமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. மாறாக ரகளையில் இறங்கியுள்ளார்.
அவரை அமைதிப்படுத்திய ஒரு விமானப் பணிப்பெண், சீட் பெல்ட்டை மாட்டி விட முயன்றார். அப்போது அந்தப் பெண்ணிடம் குறும்பு செய்துள்ளார் அந்த பயணி.
அப்போதைக்கு அமைதி காத்த விமான ஊழியர்கள், விமானம் சென்னைக்கு வந்து இறங்கியதும் அந்த நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த நபரின் பெயர் ஜாகிர் உசேன் என்பதும், நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. போலீஸார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications