நான் உண்ணாவிரதம் இருப்பேன்-வாண்டையார்:ஐயோ, வேண்டாம்.. வேண்டாம்: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஆயுதத்துடன் வாகனத்தில் வந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரின் உண்ணாவிரதப் போராட்டத்தால் தனது மனம் வேதனைப்பட்டிருப்பதாகவும்,உண்ணாவிரதத்தைக் கைவிட்டு ஜனநாயகத்தைக் காக்க பல்லாண்டு உயிர் வாழ வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மிக உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பல கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் மாபெரும் ஜனநாயகவாதியான வாண்டையார். சசிகலாவின் முழு ஆதரவைப் பெற்றவர். சிதம்பரம் பகுதியில் அடாவடிக்குப் பேர் போனவர்.

சில நாட்களுக்கு முன் அமைச்சர் ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற இவரது மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சிலர் போலீஸாரால் பிடிக்கப்பட்டு சீர்காழி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்து அங்கு ஆதரவாளர்களுடன் கிளம்பிப் போன வாண்டையார், அதிரடியாக தனது ஆதரவாளர்களை மீட்டுக் கொண்டு கிளம்பினார்.

இதையடுத்து அவரது வாகனத்தை நிறுத்தி சோதனை போட்ட போலீஸார் அதில் ஆயுதங்கள் இருந்ததால் அவரைக் கைது செய்து சூட்டோடு சூடாக திருச்சி மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.

உடனடியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வாண்டையார்.

இதையடுத்து ஜெயலலிதா, ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகே ஆதமங்கலம் கிராமத்தில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை, ஒரு கட்சியின் தலைவர் என்று கூடப் பார்க்காமல், காவல்துறையினர் தரக்குறைவாகப் பேசி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையின் அராஜகச் செயலைக் கண்டித்து வாண்டையார் உண்ணாவிரதம் இருக்கிறார். அவர் தனது போராட்டத்தைக் கைவிட வேண்டும். இது எனக்கும், அதிமுகவினருக்கும் மிகுந்த மன வேதனையை உண்டாக்கியுள்ளது.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கும், ஸ்ரீதர் வாண்டையாருக்கும், நானும், அதிமுகவும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளில் துணை இருப்போம். உறுதுணையாக தோள் கொடுப்போம்.

கட்சியின் நன்மையைக் கருத்தில் கொண்டும், ஒட்டுமொத்த தமிழகத்தில் ஜனநாயகக் குரல்வளை நெரிக்கப்படுவதை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக பேராட வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும், ஸ்ரீதர் வாண்டையாரும், அவருடன் இருக்கும் அவரது கட்சித் தொண்டர்களும் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து, நல்ல உடல் நலத்துடன் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும், எங்களுடன் இணைந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்றும் எனது பேரவாவினை தெரிவித்துக் கொள்கிறன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

வாழ்க ஸ்ரீதர் வாண்டையார்.. வாழ்க ஜனநாயகம்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+