லண்டனில் தவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்:தனி விமானம் அனுப்பும் இலங்கை
லண்டன்:கொழும்புக்கு விமான சேவையை எமிரேட்ஸ் நிறுவனம் ரத்து செய்து விட்டதால், தாயகம் திரும்ப முடியாமல் லண்டன் நகரில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானத்தை இலங்கை அரசு அனுப்புகிறது.
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் காரணமாக கொழும்பு விமான நிலையத்தில் பெரும் அச்ச சூழல் நிலவுகிறது. பல விமான நிறுவனங்கள் தங்களது இரவு நேர விமான சேவையை ரத்து செய்து விட்டன.
பயணிகளின் வருகை காரணமாக பல நிறுவனங்கள் தங்களது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. மேலும் பல விமானங்கள் சென்னைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனால் தாயகம் திரும்ப முடியாமல் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தடுமாறி வருகின்றனர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற இலங்கை வீரர்கள் தற்போது லண்டன் வந்துள்ளனர்.
அங்கிருந்து நேரடியாக கொழும்பு செல்ல எமிரேட்ஸ் விமானத்தில் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எமிரேட்ஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தி வைத்துள்ளதால் கொழும்பு திரும்ப முடியாமல் அவர்கள் லண்டனிலேயே முடங்கியுள்ளனர்.
வியாழக்கிழமையே அவர்கள் கொழும்பு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், புலிகளின் விமானத் தாக்குதல் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதால் அவர்கள் லண்டன் ஹோட்டலிலேயே தங்க நேரிட்டது.
இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களை தாயகத்திற்கு அழைத்து வர இலங்கை அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி லண்டனிலிருந்து துபாய் வரை கத்தே பசிபிக் விமானம் மூலம் வீரர்களை அழைத்து வருவது, பின்னர் அங்கு சிறப்பு விமானத்தை அனுப்பி கொழும்புக்கு கூட்டி வருவது என திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து விரைவில் நாடு திரும்பி விடலாம் என்று இலங்கை அணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications