ஜனாதிபதி-சாட்டர்ஜியை களம் இறக்கும் கம்யூ.
டெல்லி:குடியரசுத் தலைவர் பதவிக்கு லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்தப் போவதாக இடது சாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
![]() |
குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாமையே மீண்டும் நிறுத்த வேண்டும் என நாடு முழுவதும் பரவலாக ஆதரவு நிலவுகிறது. பாஜக உள்ளிட்ட சில கட்சிகளும் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க ஆதரவு தெரிவித்துள்ளன.
முக்கிய கட்சியான காங்கிரஸ் இன்னும் தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை. அதேபோல இடது சாரிக் கட்சிகளும் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தன. இருப்பினும் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க அவை எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்த நிலையில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப் போவதாக அவை தற்போது அறிவித்துள்ளன.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த வேண்டும். நாங்கள் அவரையே வேட்பாளராக நிறுத்துவோம். அவரை ஒருமித்த வேட்பாளராக நிறுத்தினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.
இவரது கருத்தை பார்வர்ட் பிளாக் கட்சியும் வரவேற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியால் சொந்த வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு அவர்களுக்கு பலம் இல்லை என்றும் பார்வர்ட் பிளாக் கட்சி கூறியுள்ளது.
சாட்டர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேசமயம், சோம்நாத்துக்கு காங்கிரஸ் ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அந்தக் கட்சி மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து தனி வேட்பாளரை நிறுத்த முயலும் எனத் தெரிகிறது.













Click it and Unblock the Notifications