பிரதமர் இல்லம் முன்பு தற்கொலை முயற்சி
டெல்லி:டெல்லியில் பிரதமர் மன்மோகன் வசித்து வரும் வீட்டின் முன்பு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பிதரமர் மன்மோகன் சிங் ரேஸ்கோர்ஸ் சாலையில் வசித்து வருகிறார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் கிஷாரிலால் என்பவர் அங்கு வந்தார். இவர் டெல்லியின் துவாரகா பகுதியைச் சேர்ந்தவர்.
பிரதமர் வீட்டுக்கு எதிர்புறம் வந்து நின்று கொண்டு தன்னிடமிருந்த துப்பாக்கியால் தனது வலது நெஞ்சில் சுட்டுக் கொண்டார். இதையடுத்து அவர் சுருண்டு விழுந்தார்.
துப்பாக்கியால் சுட்ட சப்தம் கேட்டதும் பாதுகாப்புப் படையினர் விரைந்து ஓடி வந்தனர். யாரோ கிஷாரிலாலை சுட்டு விட்டதாக முதலில் நினைத்தனர். ஆனால் கிஷாரிலாலிடம் விசாரணை நடத்தியபோது அவரே சுட்டுக் கொண்டது தெரிய வந்தது.
கிஷாரிலாலின் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டித்துப் பார்த்தார் கிஷாரிலால். ஆனால் அவர் கேட்கவில்லை. இதையடுத்து மனம் வெறுத்த கிஷாரிலால், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொள்வது போல நடித்து நாட்டின் கவனத்தை ஈர்த்து, மனைவியைத் திருத்த முடிவு செய்து இதுபோல நடந்து கொண்டாராம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிஷாரிலாலை போலீஸார் கைது செய்யத் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications