For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலில் படகு கவிழ்ந்து 77 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

மியாமி: அட்லாண்டிக் கடலில் படகு கவிழ்ந்ததில் 77 பேர் பலியானார்கள்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்காக, ஹைதி, காய்கய் போன்ற தீவுகளிலிருந்து 150க்கும் மேற்பட்டவர்கள் படகில் மியாமி நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென படகு கவிழ்ந்ததில் படகு கடலில் கவிழ்ந்தது. தகவல் அறிந்ததும் அமெரிக்க கடற்படை படகுகளும், ஹெலிகாப்டர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் இறங்கின.

ஆனால் 73 பேரை மட்டுமே உயிரோடு மீட்க முடிந்தது. 22 பேர் இறந்து விட்டனர். 55 பேரைக் காணவில்லை. அவர்களது உடல்கள் கிடைக்கவில்லை. எனவே அவர்களும் இறந்திருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

படகு கவிழ்ந்த பகுதியில் ஏராளமான சுறா மீன்கள் உள்ளன. எனவே படகிலிருந்து நீரில் மூழ்கியவர்களை சுறா மீன்கள் கொன்றிருக்கும் எனக் கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X