நாசிக் வெடிவிபத்தில் 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள வெடிபொருள் கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 15 பேர் பலியானார்கள். 3 மாடி கட்டடம் இடிந்து தரை மட்டமானது.
நாசிக் அருகே வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கி உள்ளது. இங்கு ஜெலட்டின் உள்ளிட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு இன்று அதிகாலையில் வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அருகிலிருந்த 3 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.












Click it and Unblock the Notifications