ரகசியமாக அணை கட்டும் கர்நாடகம்;பாலைவனமாகப் போகும் தமிழகம்
மேட்டூர்: தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் வேலையை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.
காவிரியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது என்று காட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறது கர்நாடகம். இந்த நிலையில் நடுவர் மன்றத் தீர்ப்பை கடுமையாக எதிர்த்துள்ள கர்நாடக அரசு, காவிரியில் புதிதாக ஒரு தடுப்பணை கட்டப் போவதாக நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அந்தத் தடுப்பணை கட்டும் பணியை கர்நாடக அரசு ஆரம்பித்து விட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 மாத காலமாக அணை கட்டும் பணி நடந்து வருகிறது. 1,000க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அணை கட்டப்பட்டு வரும் இடம் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்திற்கு 15 கி.மீ தொலைவில் உள்ளது. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியின் அருகே இந்த அணை கட்டபடுகிறது.
இது தமிழ்நாட்டின் ஒகேனக்கலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. மேட்டூரிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணை கட்டும் பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வேலி அமைக்கப்பட்டு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக அரசுத் தரப்பில் கூறுகையில், இந்த பகுதியில் விவசாய நிலங்கள் இல்லாததால் கதவணை தடுப்பு மின் நிலையம் தான் அமைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
வெறும் தடுப்பணை கட்டி மின்சாரம் தயாரித்தால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் கர்நாடகம் உண்மையிலேயே தடுப்பணை கட்டி மின்சாரம் தயாரிக்கப் போகிறதா அல்லது தண்ணீரை வேறு பகுதிக்குத் திருப்பும் எண்ணம் உள்ளதா என்பது தெரியவில்லை.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையை வெளியிடும் வரை 1992ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின்படி ஆண்டு தோறும் 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்நிலையில் கர்நாடக அரசு ரகசியமாக அணை கட்டுவதன் மூலம் மேட்டூருக்கு சும்மா வருகிற காவிரித் தண்ணீர் கூட இனி வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த அணை விவகாரம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
கர்நாடகத்தின் இந்த தடுப்பணையினால் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை உருவாகும்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications