ரகசியமாக அணை கட்டும் கர்நாடகம்;பாலைவனமாகப் போகும் தமிழகம்
மேட்டூர்: தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் வேலையை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.
காவிரியிலிருந்து ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது என்று காட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறது கர்நாடகம். இந்த நிலையில் நடுவர் மன்றத் தீர்ப்பை கடுமையாக எதிர்த்துள்ள கர்நாடக அரசு, காவிரியில் புதிதாக ஒரு தடுப்பணை கட்டப் போவதாக நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அந்தத் தடுப்பணை கட்டும் பணியை கர்நாடக அரசு ஆரம்பித்து விட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 மாத காலமாக அணை கட்டும் பணி நடந்து வருகிறது. 1,000க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த அணை கட்டப்பட்டு வரும் இடம் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்திற்கு 15 கி.மீ தொலைவில் உள்ளது. சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சியின் அருகே இந்த அணை கட்டபடுகிறது.
இது தமிழ்நாட்டின் ஒகேனக்கலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. மேட்டூரிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணை கட்டும் பகுதிக்குள் நுழையாமல் தடுக்க வேலி அமைக்கப்பட்டு காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக அரசுத் தரப்பில் கூறுகையில், இந்த பகுதியில் விவசாய நிலங்கள் இல்லாததால் கதவணை தடுப்பு மின் நிலையம் தான் அமைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
வெறும் தடுப்பணை கட்டி மின்சாரம் தயாரித்தால் அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. ஆனால் கர்நாடகம் உண்மையிலேயே தடுப்பணை கட்டி மின்சாரம் தயாரிக்கப் போகிறதா அல்லது தண்ணீரை வேறு பகுதிக்குத் திருப்பும் எண்ணம் உள்ளதா என்பது தெரியவில்லை.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையை வெளியிடும் வரை 1992ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பின்படி ஆண்டு தோறும் 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.
இந்நிலையில் கர்நாடக அரசு ரகசியமாக அணை கட்டுவதன் மூலம் மேட்டூருக்கு சும்மா வருகிற காவிரித் தண்ணீர் கூட இனி வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த அணை விவகாரம் குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டனர்.
கர்நாடகத்தின் இந்த தடுப்பணையினால் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை உருவாகும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications