மகள் எரித்து கொலை: காவல் நிலையத்தில்பெற்றோர் போராட்டம்- கணவர் கைது
சென்னை: வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மகளை எரித்துக் கொன்ற அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (23). கார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் ஹரீஷ் நடராஜ் என்பவருக்கும், பிரியாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் பிரியாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி நட்ராஜ் குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரியா தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்து விட்டதாக நட்ராஜ், பிரியாவின் பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.
ஆனால் இதை நம்பாத பிரியாவின் பெற்றோர் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், தங்களு மகள் பிரியாவை நட்ராஜும் அவர் குடும்பதினரும் சேர்ந்து எரித்து கொலை செய்துள்ளனர்.
எங்களுக்கு பல கோடி மதிப்புள்ள வீடு சென்னையில் உள்ளது. அதை வரதட்சணையாக வாங்கி வரும்படி பிரியாவிடம் கேட்டுள்ளனர். ஆனால் பிரியா இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவளை அடித்து துன்புறுத்தினர். அறைக்குள் பூட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
போலீஸாரோ இதை கண்டுகொள்ளாமல் தற்கொலை என கூறி வழக்கை முடிக்க மும்முரமாக இருந்ததால், பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல்நிலையம் முன் போராட்டம் நடத்தினர்.
இதனால் போலீஸார் நட்ராஜ், அவரது தந்தை சூரியநாதன், தாயார் உஷா, குடும்பத்தினர் அருண், விக்கி, சுரேஷ், ஹேமா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். நட்ராஜ் கைது செய்யப்பட்டார்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications