காவிரி-கூடுதல் நீதிபதிகள் விசாரிப்பார்கள்- உச்சநீதிமன்றம்
டெல்லி:காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை குறித்து கூடுதல் நீதிபதிகள் விசாரணை நடத்துவர்கள் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை வெளியிட்டது. அதன் படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஆண்டுக்கு 419 டிஎம்சி தண்ணீரை கர்நாடக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
கர்நாடகத்திற்கு 270 டிஎம்சியும், கேரளத்திற்கு 30 டிஎம்சியும், புதுச்சேரிக்கு 7 டிஎம்சி தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் கூறியது.
இந்த தீர்ப்புக்கு கர்நாடக விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கர்நாடகத்தில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து நடுவர் மன்றத் தீர்ப்பை புறக்கணிப்பதாக கர்நாடக அரசு அறிவித்தது.
இதற்கிடையே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய 90 நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள பல்வேறு விவசா. அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் சார்பிலும் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கடந்த மாத இறுதியில் காவிரி நடுவர் மன்றத்திலும் தமிழக அரசு மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தது.
அதில் காவிரியில் தமிழகத்தின் பங்காக மேலும் 60 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட வேண்டும். பற்றாக்குறை காலத்தில் நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக மாநிலங்களுக்கு உத்தரவிடும் அதிகாரத்தை காவிரி கண்காணிப்பு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசின் மனு மீதான விசாரணையை நடுவர் மன்றம் இன்னமும் தொடங்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பான மனுக்கள் மீது விசாரணையை தொடங்கியது. பெங்களூர் காவிரி நீர் உபயோகிப்பாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் சின்ஹா, மார்க்கண்டேய கட்சு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதத்தை கேட்ட பிறகு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியதாவது,
காவிரி நதிநீரை பிரித்து கொள்வது தொடர்பாக நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு மீதான வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும், அதற்கான பரிந்துரை விடுக்கப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய அரசு பதில் தாக்கல் செய்யவேண்டும். அதுபோல தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களும் பதில் தரவேண்டும்.
இதுபோன்ற பிரச்சனைகளில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண இயலாது அறிவியல், பூகோள ரீதியாக மாநிலங்கள் ஒருங்கிணைந்து தீர்வு காணமுடியும்.
எனவே காவிரி நதிநீ்ர் பிரச்சனையில் ஒவ்வொரு மாநிலமும் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவுக்கு மற்ற மாநில அரசுகள் உரிய பதிலை விரைவில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications