For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 எஸ்.பிக்கள் டிஐஜிக்களாக பதவி உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தமிழகத்தில் ஐந்து காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் துணை ஆணையர் கண்ணப்பன் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று நெல்லை சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

நெல்லை சரக டிஐஜி மாகாளி சென்னை பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் பாலசுப்ரமணியன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை ஆணையர் அலுவலகத்தில் தலைமையக இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தலைமையக துணை ஆணையர் ஜெயகவுரி அண்ணா நகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறப்புப் போலீஸ் 7வது பட்டாலியன் கமாண்டெண்ட்டாக உள்ள மாசானமுத்து சென்னை மது விலக்கு டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அமர்த்தப்பட்டுள்ளார்.

டிஜிபி அலுவலக தலைமையக உதவி ஐஜி அருணாச்சலம் டிஐஜியாக மாற்றப்பட்டு போதைப் பொருள் தடுப்பு சிஐடி பிரிவின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆவின் நிறுவன விஜிலன்ஸ் அதிகாரியாக உள்ள தாமரைக்கண்ணன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் நீடிப்பார்.

பாதுகாப்புப் பிரிவு கண்காணிப்பாளர் உமா மகேஷ்வரன், டிஜிபி அலுவலக உதவி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X