69% இடஒதுக்கீடு-பொது பிரிவினருக்கு கூடுதல்இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு
டெல்லி:69% இடஒதுக்கீட்டால் பொது பிரிவினருக்கு குறையும் இடங்களை சரி செய்யும் வகையில் அவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் நலச்சங்கம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது,
மாநிலங்களில் 50%க்கு மேல் இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.
இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக 1993ம் ஆண்டு இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது.
தற்போது இந்த சட்டம் இந்திய அரசியல் சட்டத்தில் 9வது அட்டவணையில் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே 69% இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் அரிஜித் பசாயத், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட பெஞ்சு விசாரித்தது.
அவர்கள் தமிழக அரசு கூடுதலாக வழங்கும் 19% இடஒதுக்கீட்டால் பொது பிரிவினருக்கு குறையும் இடங்களை சரி செய்யும் வகையில் அவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications