வறுக்கும் கத்திரி-சென்னையில் வெயில் 102 டிகிரி
சென்னை:கத்திரி என மக்கள் அன்போடு அழைக்கும் அக்னி நட்சத்திர வெயில் கடுமையாக ஆரம்பித்துள்ளது. சென்னையில் வெயில் 102 டிகிரியைத் தாண்ட ஆரம்பித்துள்ளதால் மக்கள் அணல் தாங்க முடியாமல் அலறிக் கொண்டுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி ஆரம்பித்தது. அதற்கு முதல் நாள் லேசாக மழை பெய்ததால் சென்னை மக்கள் சந்தோஷமடைந்தனர். ஆனால் அது அல்ப சந்தோஷமாகிப் போனது.
அடுத்த நாள் முதல் வெயில் வெளுத்துக் கட்ட ஆரம்பித்தது. நேற்று வெயில் 102 டிகிரியைத் தாண்டியது. இதனால் நகர் முழுவதும் அணல் அலை அட்டகாசமாக வீசிக் கொண்டிருக்கிறது.
பகலில் வெளியில் போக முடியாமலும், இரவில் புழுக்கம் தாங்க முடியாமலும் சென்னை மக்கள் தகிப்பில் தவித்துக் கொண்டுள்ளனர். வெளியில் போயே ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் குடை, தொப்பி, கைக்குட்டை என பல விதமான பாதுகாப்பு கவசங்களோடு பயந்து பயந்து போய் வருகின்றனர்.
சாலைகளில் பகல் நேரங்களில் இரு சக்கர வாகனங்களை அதிகம் காண முடிவதில்லை. போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணா சாலையில் பகல் நேரங்களில் போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.
வெயில் அதிகரித்தவண்ணம் இருப்பதால் குளிர்பானங்கள், ஜூஸ், சர்பத், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட உஷ்ணக் குறைப்பு பானங்களின் விற்பனை படு ஜோராக உள்ளது. பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், காவல்துறையினர் நீர் மோர்ப் பந்தல் அமைத்து மண்டை காய்ந்து கிடக்கும் மக்களுக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.
மாலை வேளைகளில் சென்னை நகர கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இரவு வரை அங்கேயே இருந்து விட்டு அதன் பின்னர் வீடுகளுக்கு அடையப் போகிறார்கள் மக்கள்.
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் இதே நிலைதான். பல நகரங்களிலும் வெயில் வாட்டி எடுப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications