கருணாநிதியைப் பாராட்டி பேட்டி:க.சுப்பு அதிமுகவிலிருந்து டிஸ்மிஸ்
சென்னைமுதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா கொண்டாட்டம் சரியானதே என்று பேட்டி அளித்த முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக சட்டமன்ற ஆலோசகருமான க.சுப்புவை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் ஜெயலலிதா.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான க.சுப்பு பல கட்சிகளில் இருந்தவர். ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பின்னர் கட்சி உடைந்த பின்னர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பிறகு அதிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.
அதிலிருந்தும் விலகி காங்கிரஸில் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி அதிமுகவில் சேர்ந்தார். அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதிக்கு 50 ஆண்டு கால சட்டசபை பொன்விழா கொண்டாடுவது குறித்து அவர் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், கருணாநிதிக்கு விழா எடுப்பது சரியானதுதான், அவரது சாதனைகளை பாராட்டியாக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் பேட்டியை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பெரிய செய்தியாக வெளியிட்டு விட்டது. இதுவே சுப்புவுக்கும் ஆப்பு வைத்து விட்டது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி சுப்புவை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications