நாளை கருணாநிதிக்கு பொன்விழாமன்மோகன் சிங், சோனியா வருகை
சென்னை: முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நாளை நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட் தலைவர்கள் வருவதால், சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டசபை உறுப்பினராக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதிக்கு பொன்விழா கொண்டாடப்படுகிறது.
நாளை மாலை சென்னை தீவுத்திடலில் நடக்கவிருக்கும் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், குஜ்ரால், உள்ளிட்டோர் வருகின்றனர்.
இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சுமார் 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வெளிமாநிலங்களிலிருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாசாலையில் முக்கிய பிரமுகர்கள் வரும்போது சாலை போக்குவரத்து நிறுத்தப்படுவதுடன், முக்கிய சந்திப்புகளில் போலீஸ் உயரதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவர்.
தீவுத்திடல் போலீஸ் கட்டுபாட்டில் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் வரும் என்பதால் வாகன நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதல்வர் பொன்விழாவை சிறப்பிக்க திமுகவினர் தடபுடலாக ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் சென்னை நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. பல இடங்களில் தோரண வளைவுகள் வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications