For Daily Alerts
Just In
தஞ்சை, கடலூரில் கன மழைஇடி தாக்கி 3 பேர் பலி
சென்னை:தஞ்சை மற்றும் கடலூரில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதில் இடி தாக்கி 3 பேர் இறந்தனர்.
தமிழகம் முழுவதும் ஒரு பக்கம் கடும் வெயில் அடித்து வரும் நிலையிலும், மறுபக்கம் ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் நல்ல மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் காளியம்மன் நகர் பகுதியில் முகம்மது யூசப் என்பர் பலியானார்.
இதேபோல தஞ்சை மாவட்டம் ஈச்சங்குழி கிராமத்தில் சரவணன், பண்டாரவடை பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணி ஆகியோர் இடி தாக்கி பலியானார்கள்.
Comments
சென்னை tamil nadu தஞ்சை பலி கடலூர் thatstamil killed tamilnadu summer heavy rain thanjavur இடி tamil news வெயில் கன மழை local body election tn political breaking
Story first published: Thursday, May 10, 2007, 5:30 [IST]