சென்னையில் முக.அழகிரி-சமாதானப் பேச்சு?
சென்னை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நிலவும் பரபரப்பான பின்னணியில், முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி இன்று காலை திடீரென சென்னைக்கு வந்தார். சமாதானப் பேச்சுக்காக அவர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பால் ஆத்திரமடைந்த மு.க.அழகிரி ஆதரவு திமுகவினர் தினகரன் மற்றும் சன் டிவி அலுவலகத்தை கடுமையாக தாக்கினர். இதில் 3 ஊழியர்கள் பலியானார்கள். சன்டிவி, தினகரன் அலுவலகம் முற்றிலும் சேதமடைந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் இதுவரை மு.க.அழகிரியின் பெயரை போலீஸார் சேர்க்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில், அழகிரி இன்று காலை திடீரென மதுரையிலிருந்து சென்னைக்கு விரைந்து வந்தார். பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்த அவர், வழக்கமான பாதையில் வெளியே வராமல், முக்கியப் பிரமுகர்கள் அழைத்து வரப்படும் பாதையில் அழைத்து வரப்பட்டார்.
அவரை தென் சென்னை காவல்துறை இணை ஆணையர் துரைராஜ், உதவி ஆணையர் குப்புசாமி ஆகியோர் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். அவருக்குப் பாதுகாப்பாக கூடவே சென்றனர்.
அழகிரியை முக்கியப் பிரமுகர்கள் அழைத்து வரப்படும் பாதையில் அழைத்துச் செல்லப்பட்டதை விமான நிலைய அதிகாரிகளுக்கும், விமான நிலைய பாதுகாப்புப் படையினருக்கும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.
அழகிரியின் சென்னை வருகை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மதுரை தாக்குதலைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடந்து கொண்டுள்ளன.
பேச்சு நடத்துவதற்காக கலாநிதி மாறனையும், தயாநிதி மாறனையும் முதல்வர் கருணாநிதி பலமுறை அழைத்தும் கூட அவர்கள் வர மறுத்து விட்டனராம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், மு.க.அழகிரியை கருணாநிதிதான் சென்னைக்கு அழைத்திருப்பதாக தெரிகிறது. அழகிரி, மு.க.ஸ்டாலின், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரை ஒன்றாக அமர வைத்து பேச கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் இதற்கு மாறன் சகோதரர்கள் முன்வருவார்களா என்பது தெரியவில்லை.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications