இருளில் மூழ்கிய தென் சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை நகரின் தென் பகுதி மக்கள் நேற்று இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

கோடை காலம் உச்சத்தை எட்டியுள்ளால் சென்னை நகரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பகல், இரவு என பாரபட்சமே இல்லாமல் அடிக்கடி மின்சாரத்தை நிறுத்தி விடுகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நிகழ்ச்சியையொட்டி நகரின் பல பகுதிகளிலும் திமுகவினர் மின் விளக்கு அலங்காரம் செய்துள்ளனர்.

குறிப்பாக, நிகழ்ச்சி நடைபெறும் தீவுத் திடலுக்கு செல்லும் வழியெங்கும் மின்சார விளக்குகளால் அலங்காரம் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான டியூப் லைட்டுகள் சாலை நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்தது.

இதுதவிர கூவம் ஆற்றின் மீது உள்ள நேப்பியர் பாலத்தையும் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர். தீவுத் திடலிலும் பகலை இரவாக்கும் வகையில் விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.

அத்தனை விளக்குகளும் நேற்று இரவு எரிய விடப்பட்டன. இதனால் தென் பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+