For Quick Alerts
For Daily Alerts
Just In
தினகரன்: 7 பேர் ஜாமீனில் விடுதலை
மதுரை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலில் கைதான மதுரை மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரை உத்தங்குடியில் உள்ள தினகரன், சன் டிவி அலுவலகம் மீது புதன்கிழமை கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த டைகர் பாண்டி, இருளாண்டி, மாரி, சரவணன், பிரபு, பாட்சா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 பேரும் மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தினகரன் நாளிதழை தீவைத்துக் கொளுத்தியதாக கைது செய்யப்பட்ட மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலையாகினர்.
Comments
எரிப்பு கைது மதுரை ஜாமீன் tamil nadu விடுதலை violence thatstamil மேயர் tamil news dinakaran தினகரன் தேன்மொழி thenmozhi
Story first published: Friday, May 11, 2007, 5:30 [IST]