For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரன்: 7 பேர் ஜாமீனில் விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலில் கைதான மதுரை மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

மதுரை உத்தங்குடியில் உள்ள தினகரன், சன் டிவி அலுவலகம் மீது புதன்கிழமை கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த டைகர் பாண்டி, இருளாண்டி, மாரி, சரவணன், பிரபு, பாட்சா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 பேரும் மேலூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தினகரன் நாளிதழை தீவைத்துக் கொளுத்தியதாக கைது செய்யப்பட்ட மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலையாகினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X