சட்டசபைக்கு புது கட்டடம்: கருணாநிதி அறிவிப்பு
சென்னைதமிழக சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் நேற்றும், இன்றும் தனக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு ஏற்புரையாற்றி கருணாநிதி பேசுகையில், இந்த சட்டசபையில் நடந்த பல்வேறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் என் மனதில் வந்து போகிறது.
சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என மாற்ற இந்த சட்டசபையில்தான் அண்ணா தீர்மானம் கொண்டு வந்தார்.
உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் சட்ட மசோதா இந்த சட்டசபையில்தான் கொண்டு வரப்பட்டது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சட்ட மசோதாவும் இங்குதான் கொண்டு வரப்பட்டது.
எனக்கு நடைபெற்ற பொன்விழாவையொட்டி சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் கோரினார்கள். அதை ஏற்று சட்டசபைக்குப் புதிய கட்டடம் கட்டப்படும் என இப்போது அறிவிக்கிறேன்.
பழமையைப் பாதுகாப்போம், புதுமையை நாடுவோம் என்பதற்கேற்ப விரைவில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்படும். திமுக ஆட்சிக்காலத்திலேயே அதன் தொடக்க விழாவையும் நாம் காண்போம் என நம்புகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications