அரசியலில் கனிமொழி-கருணாநிதி கிரீன் சிக்னல்
சென்னை: தனது மகள் கனிமொழி முழு அளவில் அரசியலுக்கு வர முதல்வர் கருணாநிதி பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
யுஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில்,
கடின உழைப்பும், மக்களுக்கான பொது சேவையும் ஒரு மனிதனை சரியான நேரத்தில் சரியான பதவிக்கு கொண்டு செல்லும் என மகள் கனிமொழிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
கவிஞரான கனிமொழி அரசியலுக்கு வருவாரா, அவருக்கு கட்சியில் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி,
இப்போதைக்கு அவருக்கு கட்சியில் எந்த பதவியும் கிடைக்காது. ஆனால் எதிர்காலத்தில் கடின உழைப்பினாலும், மக்களுக்கு சேவையாற்றுவது மூலமாகவும் நல்ல பதவி தேடி வரலாம் என்றார்.
இலக்கிய உலகில் ஓய்வின்றி செயல்பட்டுவரும் கனிமொழி, நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து பேச்சு சுதந்திரம் குறித்து கருத்து டாட் காம் என்னும் இணையதளத்தை கடந்த 2005ம் ஆண்டு ஆரம்பித்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கனிமொழியை தனது இலக்கிய வாரிசு என கருணாநிதி ஏற்கனவே அறிவித்தது நினைவுகூறத்தக்கது.