முதல்வராக பதவியேற்றார் மாயாவதி:19 அமைச்சர்களும் பதவியேற்பு
லக்னோ:நான்காவது முறையாக உ.பி. முதல்வராக மாயாவதி இன்று பதவியேற்றார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
![]() |
உ.பி. சட்டசபைத் தேர்தலில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி. நீண்ட காலத்திற்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன், ஒரு கட்சி ஆட்சி உ.பியில் அமைகிறது.
சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் நேற்று கூடி தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக மாயாவதியைத் தேர்வு செய்தனர்.
இதையடுத்து மாலையில், ஆளுநர் மாளிகைக்குச் சென்ற மாயாவதி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதுதொடர்பாக கடிதம் ஒன்றையும் ஆளுநர் ராஜேஷ்வரிடம் அவர் கொடுத்தார்.
இதையடுத்து இன்று ராஜ்பவனில் நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் மாயாவதிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 19 அமைச்சர்களும் பதவிேயற்றனர்.
மாயாவதி உ.பி. முதல்வராகப் பதவியேற்பது இது 4வது முறையாகும். உ.பியின் 32வது முதல்வராகவும் மாயாவதி பதவியேற்கிறார்.
403 பேர் கொண்ட சட்டசபையில் 206 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளார் மாயாவதி.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு உ.பியில் தனிப் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சி அமைவது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications